நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே மாட்டிக் கொண்ட பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் ரயில் வேகமாக ஓடும் நேரத்தில் இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, சமநிலையை இழந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
இதையும் படிங்க: புதிய பிரச்னையில் கிளாம்பாக்கம்.. என்றுதான் விடிவுகாலம் பிறக்குமோ..?

நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த காவலர் ஒருவர் இதனைப் பார்த்து துரிதமாக செயல்பட்டு நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட பெண்ணை மீட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி?