ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் இதில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காஷ்மீர் தாக்குதல் குறித்து உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில்Lakhimpur Kheri நடந்த கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக தெரிவித்தார்.

நமது சமூகத்தில் அராஜகத்துக்கோ பயங்கரவாதத்துக்கோ இடம் கிடையாது.இந்தியாவின் பாதுகாப்பு, சேவை மற்றும் நல்லாட்சி அனைத்தும் அதன் வளர்ச்சியில் வேரூன்றி உள்ளது. அது ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துகிறது. அது அனைவருடைய பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது. யாராவது நமது பாதுகாப்பை மீறத் துணிந்தால் துளிகூட பொறுத்துக்கொள்ள மாட்டோம். புதிய இந்தியா எதிரிகள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது. புதிய இந்தியா யாரையும் வன்முறைக்கு தூண்டாது. அதே சமயம் இந்தியாவை யாராவது சீண்டினால் வலிமையுடன் பதில் கொடுக்க தயங்கமாட்டோம் என உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த பிரதமர் வேட்பாளர் ‘யோகி ஆதித்யநாத்’.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு..!

முன்னதாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது சுபம் திவேதியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுபம் திவேதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒரு கொடூரமான செயல். அப்பாவி மக்களை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில், அவர்களின் குடும்பங்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்றது சகிக்க முடியாதது.

கொலை செய்வதற்கு முன் அவர்களின் மதத்தைக் கேட்பது, பெண்களை விதவைகளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பயங்கரவாதத்திற்கு சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக இருக்கும். துக்ககரமான இந்த நேரத்தில், நாடு பிரதமர் மோடியின் தலைமையை நம்ப வேண்டும். இது பயங்கரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் அரசு அல்ல; வாக்கு வங்கியைப் பார்க்கும் அரசும் அல்ல.
பயங்கரவாதிகளின் கொடிய, விஷப் பற்களை நசுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரித்தவர்களும் இப்போது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இப்போது அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவரும் கவனிப்பார்கள். சுபம் திவேதிக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உ.பி.யில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்..? யோகியிடம் ஆதாரம் கேட்கும் கார்த்தி சிதம்பரம்..!