அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விபரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் திமுக நிர்வாகி எனவும், அவருக்கு எதிராக, இதே போன்ற பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன எனவும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ED சோதனைக்கு எதிரான வழக்கு.. நீதிபதியை மாற்றக்கோரி முறையீடு..!

திமுக நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், இந்த வழக்குகளை சிபிஐ-க்கோ, சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அடங்கிய அமர்வு, ஞானசேகருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விபரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை பதிவுசெய்து 3 பெண் காவல் அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு விசாரிக்க உத்தரவிட்டது. இதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: வாடகை தராமல் கோயில் நிலத்தில் குடியிருப்பதா..? அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு உத்தரவு..!