ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களுக்கு என தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைய உள்ளது.
இதையும் படிங்க: புளோரிடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ..! செய்வதறியாது தவிக்கும் மக்கள்..!

இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கிடையே இந்த தடத்தில் பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது.வெகுநேரமாக காத்திருந்தும், அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நடத்த முன்வரவில்லை. இதற்கிடையே அந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து, மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. தீப்பொறிகளும் வெடித்து சிதறின. மேலும் ரயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின. இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இலக்கை எவ்வித இடர்பாடும் இன்றி எட்டி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின்போது 20 முதல் 30 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.
இதையும் படிங்க: நம்பி தான் ஓட்டு போட்டோம்..! முதல்வர் எங்களை கண்டுக்கல.. வேதனையில் ஆசிரியர்கள்..!