வேலை வாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்.பி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில், வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம் என்றும் கூறினார்.

குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட விஜய் வசந்த், இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர் என்றும் மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம்.. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என முழக்கம்..!

இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதற்கு முன்னதாக கோவிட் பேரிடரை காரணம் காட்டி மத்திய அரசு ரயில் பயண கட்டணத்தில் வழங்கி வந்த சேவையை வாபஸ் பெற்றது., ஆனால் கோவிட் முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பிய பின்னரும் மத்திய அரசு இந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க முன் வரவில்லை., எனவே, கொரோனா பேரிடருக்கு முன்பு இருந்தது போல் மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கிட வேண்டுமென்றும் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது- பிரதமர் மோடி பெருமிதம்..!