பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் நடைபெற்ற பணிகளில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே துறை சார்ந்த சேப்டி அதிகாரி கூறியதை அடுத்து சர்ச்சைகள் எழுந்தது
இந்த நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ஊடகவியலார்களை பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அழைத்து வந்து பாலத்தை பார்வையிட வைத்து ரயில்வேதுறை அதிகாரிகள் விளக்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே துணை பொது மேலாளர் சீனிவாசன் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள் 100% பாதுகாப்பாகவும் வலுவாகவும் உள்ளது, ஜனவரி முதல் வாரத்தில் பாம்பன் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்கிறார்
மேலும் இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்கு பாலமாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் புதிய பாலத்தில் கடலுக்கு நடுவே சுமார் 100 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது, பழைய பாலத்தை விட மூன்று மீட்டர் உயரமாக இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தான ... மின்னொளியில் ஜொலிக்கும் கண்ணாடி பாலம்