தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2015ஆம் ஆண்டு தொகுத்து அடிப்படையில் 7243 செவலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும் நெற்ற ஆண்டுகளாகியும் 4000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எதிர்த்த தொகுப்புக்குரிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்ததால் அவர்களுக்கு சம விலைக்கு சமூக வழங்க வேண்டும்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன் பொது புதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து ஆறு மாதத்தில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் பிரச்சனையை திசை திருப்புகிறார்கள்..! தமிழக அரசு மீது ED சரமாரி குற்றச்சாட்டு..!

இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்களின் பணி குறிப்பு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போதைக்கு இந்த நீதிமன்ற வழக்கை முடிக்க வைப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் எனவும் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் பொன்முடி விவகாரம்.. கேஸ் போடாவிட்டால் அவ்வளவு தான்.. எச்சரித்து அனுப்பிய ஐகோர்ட்..!