இந்து மக்கள் கட்சி தரப்பில் ராமநவமி தினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

ராம நவமி தினத்தையொட்டி வருகிற ஏப்ரல் 6ம் தேதி சேலம் அயோத்தியப்பட்டினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் பிறந்த குழந்தை.. குடியுரிமை குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு..!
அந்த மனுவில், இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி ராம நவமி தினத்தையொட்டி சேலம் அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராம ரத யாத்திரை நடத்த திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரத யாத்திரையில் சிறப்பு பூஜைகளுடன் சேலம் அயோத்தியாபட்டினம் தொடங்கி, உடையப்பட்டி அம்மாப்பேட்டை ரவுண்டானா வழியாக சவுந்தரராஜா பெருமாள் கோவிலில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சின்னக்கடை, பெரியக் கடை வீதி வழியாக செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு பூஜையுடம் நிறைவடைகிறது.

இது தொடர்பாக அனுமதி கோரி தமிழக அரசு, காவல்துறை ஆகியோருக்கு மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில், சேலம் அம்மாப்பேட்டை உதவி ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி அனுமதி மறுத்து உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவல் துறை அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான தேர்தல் வழக்கு.. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..!