கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில், கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.2,488 கோடி அதிகரித்துள்ளது. அதாவது, 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி ஆக இருந்தது.
கடந்த 2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45,856 கோடியாக இருந்தது. 2022 - 23ல், 44,121.13 கோடி ரூபாயாகவும், 2021 - 22ல், 36,050.65 கோடி ரூபாயாகவும் இருந்தது. ஆண்டுதோறும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனிடையே, டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்றுக்கூறி அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடிக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை.. ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்..!
வெளிநடப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் நிறுவனத்தின் மீது பல்வேறு இடங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல டாஸ்மாக் சார்ந்த நிறுவனங்களில் ஆய்வு நடத்தினார்கள்.
கூடவே, மதுபானம் தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதுக்குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை இந்த சம்பவம் குறித்து முதல் அமைச்சர் உட்பட யாரும் பேசவில்லை. இதுக்குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர முயற்சித்தேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது.

ரூ.1000 கோடி ஊழல் என்ற குற்றச்சாட்டை அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதுக்குறித்த முழுமையான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை. நான் கேள்வி கேட்க முயற்சித்தப்போது, இதுக்குறித்து பேச கட்டாயம் அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். இதற்கு பொருள் ரூ.1000 கோடி ஊழலில் அரசுக்கு சம்பந்தம் உள்ளது என்பது தான்.
டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூல் செய்கின்றன. ஒரு நாளைக்கு 1.5 கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம். ஒரு மாதத்திற்கு 450 கோடி ரூபாய் ஆகும். ஒரு ஆண்டிற்கு ரூ.5,400 கோடி.
இதையும் படிங்க: புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!