சமீபத்தில் ருத்ராட்ச மாலைகள் மற்றும் அலங்கார மாலைகள் இருக்கும்16 வயது இளம்பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் வைரலாக வலம் வந்தார்.
லியானார்டோ டாவின்சி வரைந்த மோனா லிசா ஓவியம், உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். இந்த ஓவியத்தை மையமாக வைத்து அழகான இளம்பெண்களை, மோனா லிசா என்று அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் அந்த இளம் பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். அவருடைய புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்தப் 16 வயது பெண் மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்தவர்.

குடும்ப வறுமை காரணமாக, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ருத்ராட்ச மாலைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சமூக ஊடகத்தினரும் மற்றும் செய்தியாளர்களும் அவரை மோனாலிசா என்ற பட்டப் பெயர் வைத்து அழைத்ததைத் தொடர்ந்து அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது “தினமும் ரூ.3,000-க்கு ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வருகிறேன். என்னிடம் ரூ.50,000 மதிப்புள்ள மாலைகள் உள்ளன. இவை அனைத்தையும் மகா கும்ப மேளாவில் விற்க திட்டமிட்டு உள்ளேன். இதன்மூலம் ரூ.1.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மகா கும்ப மேளாவின் மோனாலிசா" : அலங்கார மாலைகள் விற்கும் "16 வயது அழகு தேவதை"யின் 'வீடியோ வைரல்'
இந்த மோனாலிசாவை தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் துறவி ஹர்சாவும் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. மாடல் அழகியாக இருந்தஇவர் தற்போது நிரஞ்சனி அகாடா ஆசிரமத்தில் இணைந்து துறவியாக மாறியிருக்கிறார். இதுகுறித்து ஹர்சா கூறும் போது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தேன். அதில் மன அமைதி கிடைக்கவில்லை. தற்போது மன அமைதிக்காக ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

அவருடைய முழு பெயர் ஹர்ஷா, ரிச்சார்யா. இன்ஸ்டாகிராமில் இவருக்கு மட்டும் 10 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அவருடைய பழைய மாடலிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு பிரிவினர் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். ஹர்ஷா ரிச்சார்யா தன்னைமகா மண்டலேஸ்வரரின் சீடர் என்று கூறிக் கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் 'போஸ்ட் ஹர்ஷா' என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கிறார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்திலும் ஹர்ஷா பங்கேற்று இருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களும் வலம் வருகின்றன. மகா கும்பமேளாவில் ஆன்மிக நிகழ்வுகளிலும் ஹர்ஷா பங்கேற்று வருகிறார். ஆன்மிக தலைவர் வியாசானந்த் கிரி மகாராஜாவை கௌரவிக்கும் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்க கோடீஸ்வரர் பவர் ஜாப்ஸ்சும்(மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்சின் மனைவி) பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

திடீர் மாயமான மற்றொரு மோனாலிசா , இதற்கிடையில் மாலை விற்கும் மோனாலிசா பற்றி நேற்று முன்தினம் பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முன்பும் மத்திய பிரதேச மாநிலத்தின் அதே இந்தூரைச் சேர்ந்த மற்றொரு மாலை விற்ற இளம்பெண் (மோனாலிசா) ஒருவரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரபலம் ஆகி இருக்கிறார். அந்தப் பெண்ணை தற்போது காணவில்லை. பாதுகாப்பு கருதி பிரயாக்ராஜில் இருந்து சொந்த ஊரான இந்தூருக்கு திரும்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “எங்கள் வீட்டு பெண் திடீரென சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிட்டார். மகா கும்பமேளாவில் அவரை தேடி தினமும் பலர் வருகின்றனர். அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. வியாபாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். எங்கள் குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.6 கோடி நகைகள் அணிந்து, "மகா கும்பமேளா' பக்தர்களைக் கவரும் தங்கச் சாமியார் ; இதுவரை 8 கோடி பேர் புனித நீராடல்