பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் துணை நிற்பதாக அறிவித்துள்ளன. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்ககு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதருக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று நள்ளிரவு சம்மன் அனுப்பியது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது இன்று நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: வானில் வட்டமடிக்கும் இந்திய ரஃபேல்..! பாக்., தாக்கப்பட்டால் பதிலடி உறுதி- பாகிஸ்தான் ஆவேசம்..!

இந்த நடவடிக்கைகளால் கோபமடைந்த பாகிஸ்தான், தேசிய பாதுகாப்புக் குழுவின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற இந்த இந்தக் கூட்டத்திற்கு பின், பாகிஸ்தானும் சில முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும், பாகிஸ்தான் வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது, வாகா எல்லை வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டு எல்லை மூடப்படுகிறது, இந்தியாவுடனான பொருளாதார உறவுகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிந்து நதிநீர் திறப்பை இந்தியா நிறுத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வார்ரைச்சுக்கு ஏற்கனவே இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில், இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாத 'பாம்புகளை' வளர்க்க பாக்., எத்தனை கோடி செலவு செய்கிறது தெரியுமா..? அடேங்கப்பா..!