கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வாரம் மே 1ம் தேதி வெளியாக உள்ள படம் 'ரெட்ரோ'. இப்படத்தை தெலுங்கு, இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். சூர்யாவிற்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. படத்தில் தெலுங்கு ரசிகர்களின் அபிமான நாயகியான பூஜா ஹெக்டேவும் நடித்திருப்பதால் அது படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கிறது. தமிழில் இப்படத்திற்கான பிரம்மாண்ட விழாவை கடந்த வாரம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள்.
இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சூர்யாவுடன் ஒப்பிடும் போது விஜய் தேவரகொண்டா ஜுனியர் நடிகர்தான் என்றாலும் ரெட்ரோ படம் இளைஞர்களுக்கான படம் என்பதால் தெலுங்கில் உள்ள இளம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் விஜய் தேவராகொண்டாவை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது இந்திய அளவில் பெரும் பேசு பொருளானது. அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்குறீர்கள் என நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். படத்தை பற்றி பேசுவதற்கு முன்பு பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன் என விஜய் தேவரகொண்டா பேசினார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசுகையில் ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் உலகம் அதிர்ச்சியடைந்தது. இறந்தவர்களின் குடும்பங்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளன.
இதையும் படிங்க: தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!!

அந்த வலியை நேரில் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், அதன் வலியையும் கோபத்தையும் உணர்கிறோம். அது நடந்திருக்கக்கூடாது. இந்த சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில் அங்குள்ளவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட வேண்டும். அவர்களை மூளைச்சலவை செய்ய விடக்கூடாது. நான் சொல்றுள்ளேன், காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது." காஷ்மீரிகளும் மனிதர்கள்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு குஷி படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தினேன். அப்போது அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட நிறைய நல்ல நினைவுகள் அனுபவங்கள் உள்ளன. பாகிஸ்தானியர்களால் தங்கள் சொந்த மக்களையே கவனித்துக் கொள்ள முடியாதபோது, அவர்கள் இங்கே என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?

அங்கு தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை அந்த நாட்டிம் வளர்ச்சி மீதும் அந்த நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் காஷ்மீரில் என்ன செய்ய போகீறீர்கள். பாகிஸ்தானைத் தாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. பாகிஸ்தானின் செயல்பாடு இதேபோல் தொடர்ந்தால், பாகிஸ்தானியர்கள் வெறுப்படைந்து தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி அடைந்து தாக்குவார்கள்.
தற்போது நடப்பது பார்த்தால் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் செய்தது போல உள்ளது. கொஞ்சம் கூட ஞானம் இல்லாமல், குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல் செய்யப்படுகின்றனர். ஒரு மக்களாகிய நாம் ஒன்றாக ஒன்று சேர வேண்டும். "நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக பஹல்காமில் தாக்குதல் நடந்தபோதே விஜய் தேவரகொண்டா கண்டனம் தெரிவித்திருந்தார். பஹல்காமில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக எனது பிறந்தநாளை படப்பிடிப்புக்கு மத்தியில் சிரிப்புடன் கொண்டாடினேன். காஷ்மீரில் உள்ள எனது நண்பர்கள் எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். பஹல்காமில் நடந்தது இதயத்தை நொறுக்குவதாகவும் கோபத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது.
உங்களை நீங்கள் பாதுகாப்புப் படை எனக் கூறிக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை சுடுவது துப்பாக்கிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் முட்டாள்தனமான தீவிரவாதிகளின் மிகவும் கோழைத்தனமான செயலாகும். பாதிக்கப்பட்டவர்களுக்காவும் அவர்களது குடும்பத்திற்காகவும் ஆதரவாக நிற்கிறோம். காஷ்மீர் மக்களுடனும் ஆதரவாக இருக்கிறோம். இந்தக் கோழைகளை விரைவிலேயே சுத்தமாக நீக்கி விடுவோம் என நம்புகிறேன் என விஜய்தேவரகொண்டா கூறி இருந்தார்.
இதையும் படிங்க: விடிய விடிய துப்பாக்கிச்சூடு.. தீவிரமடையும் தேடுதல் வேட்டை.. பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது..!