அதாவது, மாயா பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்து ஜூஸில் போதை மருந்தை கலக்குகிறாள். சர்வெண்ட் ஒருவனிடம் இந்த ஜூஸை கார்த்திக்கு கொடு என்று சொல்லி அனுப்புகிறாள். ஆனால் ரேவதி தவறுதலாக அந்த ஜூஸை குடித்து விடுகிறாள். இதையடுத்து ரேவதி போதையில் தள்ளாட தொடங்குகிறாள். பார்ட்டி முடிந்ததும் கார்த்தி மற்றும் ரேவதி என இருவரும் கிளம்பி ரூமுக்கு வருகின்றனர்.
ரூமுக்கு வந்த ரேவதி எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை என்று புலம்பி வாந்தி எடுத்து தூங்கி விடுகிறாள். அடுத்த நாள் காலையில் கண் விழிக்க அவளது உடை மாறி இருக்க ரேவதி இது எப்படி நடந்தது என ஷாக் ஆகிறாள்.

கார்த்தி தான் காரணமாக இருக்க வேண்டும் என அவனிடம் கோபப்படுகிறாள். பிறகு ஒரு பெண்மணி காபி கொண்டு வந்து குடிங்க மா தலைவலிக்கு நல்லா இருக்கும் என்று சொல்கிறாள். ரேவதி எனக்கு தலை வலிக்குது உனக்கு யார் சொன்னது என்று கேட்கிறாள்.
இதையும் படிங்க: ரேவதியின் தோழியின் ஏற்பாட்டால் நடக்கும் மேஜிக்.! சாமுண்டீஸ்வரி செம்ம ஹாப்பி? கார்த்திகை தீபம் அப்டேட்!
பிறகு அந்த பெண்மணி நைட் கார்த்தி தன்னை கூப்பிட்டு உங்களுக்கு உடை மாற்றி விட சொன்னதாக நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு ரேவதி பதில் பேச முடியாமல் நான் மாத்திரை வாங்க போறேன் என்று மெடிக்கல் ஷாப் கிளம்பி வருகிறாள்.

மாயா ஏற்பாடு செய்த ஆட்கள் ரேவதியை கடத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? ரேவதி கடத்தப்பட்ட விஷயத்தை அறிந்து அவளை எப்படி கார்த்திக் காப்பாற்ற போகிறான் என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்வோம்.
இதையும் படிங்க: Karthigai Deepam: ரேவதியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் - விஷயம் இது தானா? கார்த்திகை தீபம் அப்டேட்!