ஒரு பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு குற்றத்தில் உண்மையான முயற்சி மற்றும் தயாரிப்பு நிலை என்று நீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டில் சாலையில் நின்றிருந்த ஒரு சிறுமிக்கு பவான், ஆகாஷ் இருவரும் காரில் லிப்ட் அளித்துள்ளனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்றனர். இந்த சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே இருவரும் தப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் உறவினர் அளித்த புகாரில் போலீஸார் பவான், ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது ஐபிசி பிரிவு 376 பாலியல் பலாத்காரம், போக்ஸோ சட்டத்தில் பிரிவு18ன் கீழ் சிறுமியை பலாத்கார முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 16 ஆண்டுகள் "லிவ் இன்" உறவில் இருந்தாலும் கற்பழிப்பு புகார் கூற முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கீழ்நீதிமன்றமான கஸ்காஞ்ச் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை அதை ரத்து செய்யக்கோரிமனுத்தாக்கல் செய்தனர். ஆனால், இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மனு செய்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவும், பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் கோரினர். தங்களுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருப்தாக எடுத்துக் கொண்டாலும், குற்றச்சாட்டுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 மற்றும் 354(b) மற்றும் போக்சோ சட்டத்தின் சிலபிரிவுகளுக்கு அப்பால் செல்ல முடியாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனுவில் தெரிவித்தனர்.
இந்த மனுவை நீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா விசாரித்து கடந்த 17ம் தேதி உத்தரவுகளைப் பிறப்பித்தார் அதில் “குற்றம்சாட்டப்பட்டவர்கள் எடுத்துவைத்த வாதங்களை உயர் நீதிமன்றம் ஏற்கிறது. குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சிதான். அதாவது பலாத்காரம் செய்வதற்கான தயாரிப்பு நிலைக்குதான் குற்றச்சாட்டப்பட்டவர்கள் சென்றனர். ஒரு குற்றத்தைச் செய்வதற்கான தயாரிப்புக்கும், உண்மையான முயற்சிக்கும் உள்ள வேறுபாடு அதிக அளவிலான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் அந்த சிறுமியை பாலத்துக்கு கீழே கொண்டு சென்று அவரின் பைஜாமை கிழித்துள்ளார். இதை எந்த சாட்சியும் பார்க்கவில்லை, இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை, ஆடைகள் கழற்றப்படவில்லை. ஆதலால், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் என்ற குற்றச்சாட்டு பொருந்தாது, குற்றம்சாட்டப்பட்டவரும் பாலியல் பலாத்கார முயற்சியும் செய்யவில்லை.
ஒரு பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை ரத்து செய்து அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரை ஐபிசி பிரிவு 354 (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா! புனே பேருந்தில் பெண் பலாத்கார வழக்கு.. 75 மணி நேரத்தில் குற்றவாளி கைதானது எப்படி..?