''ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பாஜக இதை செய்திருக்கிறது'' என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் திமுக ஆதரவாளரான சுந்தவள்ளி.
பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் மரணமடைந்தனர். இதற்கு நாடே வருத்தம் தெரிவித்து வருகிறது. தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சியினரும், ஆதரவாளர்களும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருவது அவர்களை பாகிஸ்தான் பிரிவினைவதிகளை விட மோசமானவர்களாக உணர வைக்கிறது.

உச்சகட்டமாக சுந்தரவள்ளி தனது எக்ஸ்தளப்பதிவில் பதிவிட்டு வரும் கருத்துக்கள் சுந்தரவில்லி என அழைக்கும் வகையில் நாட்டிற்கு எதிராக உள்ளது. ''ராணுவ வீரர்களை பாதுகாப்பின்றி ஆயுதங்களின்றி தெருவில் விட்ட மோடி. மேஜர் ஜெனரல் அவரின் கடுமையான கோபம் இது. மோடியை குற்றம் சாட்டினால் ராணுவத்தை குறை சொல்லுகிறோம் என்று வருகிற தற்குறிகளுக்கு சமர்ப்பணம்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு 4 மணி நேரத்தில் 4 அறிகுறிகள்... பாக்., எதிராக இந்தியா மாபெரும் திட்டம்..!
சுஜாதா மென்பொருளாளர் மனைவி மூன்று வயது குழந்தையோடு சுற்றுலா சென்றவர் கணவர் கொல்லப்பட்டார். மூன்று இஸ்லாமியர்கள் எங்களை காப்பாற்றினார்கள். என் மகனை தோளிலே போட்டுக்கொண்டு எங்களை பத்திரமாக அங்கிருந்து காப்பாற்றிக் கொண்டு போனார்கள் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

மோடி கிட்ட போய் சொல்லு என்று சவால் விட்டுவிட்டு 26 பேரை கொன்று விட்டு சென்றிருக்கிறார்கள் பயங்கரவாதிகள். 25 இந்துக்களுக்கும் 1 இஸ்லாமியரின் உயிருக்கும் மோடி என்ன பதில் சொல்லுவார்? புலனாய்வு அமைப்புகள் தோற்றுப் போனதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். பதவிவிலக வேண்டும்.
எல்லைகளில் ராணுவத்தினர் மீது தாக்குதல்கள் எல்லைகளைத் தாண்டி இந்தியாவின் எல்லைகளை பிடித்து வைத்துள்ள அண்டை நாடுகள் இந்தியாவிற்குள் வந்து மக்களை கொலை செய்யும் பயங்கரவாதிகள். நாட்டைக் காப்பாற்ற வக்கற்ற மோடி சௌக்கிதார். அமித்ஷாவும், மோடியும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

மாலேகான் அஜ்மீர் தர்கா அவுரங்காபாத் உட்பட 18 இடங்களில் செல்போன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து இஸ்லாமியர்கள் மீது பழி போட்ட ஆர்எஸ்எஸ் கும்பல் கொத்தாக சிக்கியது. ஆர்எஸ்எஸ் பயங்கரவாதத்தை கண்டுபிடித்த பயங்கரவாத ஒழிப்பு தலைவர் ஹேமந்த் கட்கரே தாஜ்ஹோட்டல் தாக்குதலில் ஆர்எஸ்எஸ் கொன்றது. சங்கிகள் தொட நடுங்கிகள் போல விடாம உலக நாடுகள் முழுவதும் இருந்து கால் பண்றீங்க. ரொம்ப பழைய டெக்னிக்டா.. விபச்சாரி, வேசினு நீங்க கட்டி விட்ட லட்சக் கணக்கான கதைகளுக்கே அஞ்சாத ஆளு நான்.
பதான்கோட் ராணுவ தளவாடங்களை பாதுகாக்கும் முகாம் அதற்குள் நுழைஞ்சு அடிச்சானுங்க. மோடி ஆட்சியில்தான் ராணுவ வீரர்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட கதைகளை எல்லாம் உண்டு. நாட்டையும், எல்லையையும், மக்களையும் பாதுகாக்க வக்கற்ற மோடிக்கு சௌக்கிதார் என்று பெயர். கேடுகெட்ட சங்கிகள் ஆட்சியில் ஒருவரும் நிம்மதியாக வாழ முடியாது. சுற்றுலா சென்றவர்கள் கொன்று குவிக்கப்பட்டதை வாய்மூடி வேடிக்கை பார்க்கும் சங்கி கும்பல்.

நாடகத்தை போடும் மோடி அமித்ஷா மோர்பி பாலத்தில் 141 பேர் இறந்தபோது வராத, புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது வராத, வெள்ளத்தில் தமிழ்நாட்டைக் காணவராத, பற்றி எரியும் மணிப்பூருக்கு வராத மோடியும், அமித்ஷாவும் பதறுவதும், உடனடியாக ஜம்மு-காஷ்மீர் போவதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. இதுவும் தேர்தல் வியூகமோ?
காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா? என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பாஜக இதை செய்திருக்கிறது'' என தொடர்ச்சியாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார் சுந்தரவள்ளி.
இவர் மீது தேசத்துரோக வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. டெல்லி, மும்பை, உள்பட முக்கிய நகரங்கள் ஹை அலர்ட்..!