2025 ஐபிஎல் சீஸனில் இன்றைய போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர். குர்பாஸ் 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 16 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து விப்ராஜ் வீசிய 7வது ஓவரில் சுனில் நரைன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அக்சர் படேல் வீசிய அடுத்த ஓவரிலேயே ரஹானே 26 ரன்களில் வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரகுவன்ஷி அதிரடியாக விளையாட, வெங்கடேஷ் ஐயர் வழக்கம் போல் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில் சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங் - ரஸ்ஸல் கூட்டணி களமிறங்கியது.
இதையும் படிங்க: அதிரடியாக ஆடிய KKR... டெல்லி அணிக்கு 205 ரன்கள் இலக்கு!!

ஆனால் ரிங்கு சிங் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 36 ரன்களில் ஆட்டமிழக்க, ரோவ்மன் பவல் களமிறங்கினார். தொடர்ந்து 19வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 14 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச ஸ்டார்க் வந்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டாலும், டெல்லி அணி டீம் ஹாட்ரிக் எடுத்து அசத்தியது. இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. 205 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் மற்றும் டூப்ளசிஸ் களமிறங்கினர். போரல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நாயர் 15 ரன்களில் அவுட் ஆனார்.

மறுமுனையில் டூப்ளசிஸ் 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கே.எல்.ராகுல் 7 ரன்களில் அவுட் ஆனார். ஒருவரும் வரிசையாக விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் அக்கம்பக்கம் மற்றும் ஸ்டாப்ஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருந்தபோதிலும் 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: GT-யின் பந்துவீச்சை துவம்சம் செய்த சூர்யவன்ஷி... 8 விக்கெட் வித்தியாசத்தில் RR வெற்றி!!